அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு.. திருவண்ணாமலையில் பரபரப்பு..! அரைவேக்காடு ஆப்பாயில் புள்ளிங்கோஸ் அட்டூழியம்.!! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த 8 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்து, அங்குள்ள கிளியாத்தூர் பகுதியருகே செல்கையில், பேருந்தை எட்டு பேர் கொண்ட இளைஞர் கும்பல் வழிமறித்துள்ளது. 

இவர்கள் மீது மோதாமல் இருக்க வாகனத்தை உடனடியாக ஓட்டுநர் நிறுத்திய நிலையில், பேருந்தின் முன்புற கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிவிட்டு, அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு கண்ணியம் நகர் மற்றும் புளியரம்பாக்கம் காலனி பகுதியை சார்ந்த 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Cheyyar Pullingows Broken Govt Bus Front Mirror Using Stones 8 Gang Team Arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->