கார்-லாரி நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து! உடல் சிதைந்து உயிரிழந்த சம்பவம்!         - Seithipunal
Seithipunal


கர்நாடகா, பெங்களூர்வை சேர்ந்த 4 ஆண்கள், 2 சிறுவர்கள், 2 பெண்கள் என மொத்தம் 8 பேர் நேற்று காரில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்துவிட்டு இன்று காலை ஊருக்கு திரும்பினர். 

திருவண்ணாமலை, செங்கம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. 

இந்த பயங்கர விபத்தில் கார் முழுவதும் நொறுங்கி காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த ஒரு பெண் மட்டும் பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார். 

இந்த கோர விபத்தை பார்த்த வாகன ஓட்டிகள் பதறி அடித்து ஓடியதால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காருக்குள் பலத்த காயமடைந்து துடி துடித்துக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து காருக்குள் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்த 7 பேர் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தில் பலியானவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Car lorry collision accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->