காதலன் இறந்த துக்கத்தில் ஆரணி கல்லூரி மாணவி சென்னையில் தற்கொலை.!
Tiruvannamalai Arani girl Suicide at Chennai Medavakkam due to His Lover Passed Away Feeling Sad
காதலன் இறந்த துக்கத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் சரஸ்வதி (வயது 19). இவரது சொந்த ஊர் ஆரணியாகும். இவர் சென்னையில் இருக்கும் கல்லூரியில் முதல் வருடம் படித்து வந்துள்ளார்.
மேடவாக்கத்தில் இருக்கும் தனது அக்காவின் இல்லத்தில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்த நிலையில், சொந்த ஊரில் உறவுக்கார வாலிபரை காதலித்து வந்ததாக தெரியவருகிறது. அந்த வாலிபர், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவரின் இறுதி சடங்கிற்கு சென்ற சரஸ்வதி, நேற்று முன்தினம் மீண்டும் அக்காவின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், ஊருக்கு சென்று வந்ததில் இருந்து காதலன் இறந்துபோன துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட சரஸ்வதி, இன்று காலை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தங்கை தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கா அலறித்துடிக்கவே, விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், இந்த விஷயம் தொடர்பாக பள்ளிக்கரணை காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tiruvannamalai Arani girl Suicide at Chennai Medavakkam due to His Lover Passed Away Feeling Sad