திருப்பூர்: தாயின் தவறான பழக்கத்தால், 17 வயது சிறுமி கர்ப்பம்.. காமுகன் கைது..! - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காமுகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மணிகாரம்பாளையம் பகுதியைச் சார்ந்தவன் ராஜ். இவன் டெய்லராக பணியாற்றிய வருகிறான். இவன் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவன் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இதே பகுதியில் கணவரை விவாகரத்து செய்த பெண்மணி வசித்து வந்துள்ளார். 

இவருடன் காமுகனுக்கு பழக்கம் ஏற்படவே, இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், பெண்ணின் இல்லத்திற்கும் அவ்வப்போது ராஜ் சென்று வந்துள்ளான். 

அந்த பெண்ணிற்கு 17 வயது மகள் உள்ள நிலையில், காமுகன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இது குறித்து வெளியே கூறினால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளது. சிறுமியிடம் தாய் மேற்கொண்ட விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளான். 

காமுகனின் திருமணத்தை மீறிய உறவுகளில் சிக்கும் பெண்களால், வீட்டிலிருக்கும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் மட்டுமல்ல பல சம்பவம் சாட்சியாக நடந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur child sexual abuse police arrest culprit 31 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->