காதலிக்க மறுத்த காதலி.. பெண்ணை பழிவாங்க காதல் எடுத்த விபரீத முடிவு.!
Tirunelveli Love culprit arrest by police publish love girl image social media
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு கீழவடகரை கிராமத்தை சார்ந்தவர் அன்பழகன். இவரது மகன் மதன்ராஜ் (வயது 26). இவர் அப்பகுதியை சார்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
காதலின் போது இருவரும் அன்பின் அடையாளமாக புகைப்படம் எடுத்து இருந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவரவே, பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக பெண் காதலை கைவிடவே, மதன் ராஜிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமுகன் இளம்பெண்ணின் புகைப்படத்தை அவதூறாக இணையதளத்தில் பதிவு செய்துள்ளான்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி தந்தையிடம் விஷயத்தை தெரியப்படுத்தவே, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மதன் ராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirunelveli Love culprit arrest by police publish love girl image social media