சம்பவம்..! இடப்பிரச்சனையால் இருதரப்பு மோதல்.. காவல் அதிகாரிகள் முன்னரே பரபரப்பு நிகழ்வு.!
Tirunelveli Kalakkad 2 Family Fight Video Trend an Social Media
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகேயுள்ள வடுவூர்பட்டி பகுதியை சார்ந்தவர் செல்வராஜ். இதே ஊரை சார்ந்தவர் பண்டாரம். இவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்து வரும் நிலையில், அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக இடம் தொடர்பான தகராறு இருந்து வந்த நிலையில், கடந்த 2 வருடமாக இவ்வழக்கு விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்துள்ளது.
இதன்போது, இருதரப்பினரும் வாக்குவாதம் செய்ததால், அது கைகலப்பாக மாற தொடங்கியுள்ளது. மற்றொரு விசாரணைக்காக வடுவூருக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், இருதரப்பு மோதலை கண்டு அவர்களை விலக்கிவிட முயற்சி செய்துள்ளனர்.
காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே குடும்பத்தினர் தாக்கிக்கொண்ட நிலையில், இந்த சம்பவத்தை அப்பகுதியை சார்ந்தவர் விடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, மோதல் தொடர்பாக இருதரப்பையும் சார்ந்த 3 பெண்கள் உட்பட 10 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tirunelveli Kalakkad 2 Family Fight Video Trend an Social Media