கள்ளகாதலியுடன் சமயலறையில் பாதிரியார் உல்லாசம்... நேரில் பார்த்த பெண் கொலை முயற்சி.. நெல்லையில் பகீர்.!
Tirunelveli Church Father Affair with Jayalatsumi Murder attempt Truth about Affair Woman
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி ரோஸ்மியாபுரம் கிராமத்தில் ஹேர் மைனஸ் என்ற இளையோர் மற்றும் முதியோர் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 30 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தங்கியுள்ளனர்.
இந்த காப்பகத்தை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஈஸிதேர் என்ற பாதிரியார் நிர்வாகம் செய்து வந்துள்ளார். திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தான்மொழி கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர், இங்கு பல வருடமாக சமையல் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், காப்பகத்தின் நிர்வாகியான ஜோசப்பிற்கும் - அங்கு பணியாற்றி வரும் ஜெயலட்சுமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 25 ஆம் தேதி காப்பகத்தில் உள்ள தனி அறையில் இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த நிலையில், இதனை எதிர்பாராதவிதமாக ராஜம்மாள் பார்த்துவிட்டார்.
இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஜோசப் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் சேர்ந்து, ராஜம்மாளை தாக்கி அங்குள்ள ராதாபுரம் அரசு மருத்துவமனையில், சமையல் செய்யும் போது தவறி விழுந்து விட்டதாக அனுமதி செய்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ராதாபுரம் உதவி ஆய்வாளர் சிவபெருமாள், மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொள்கையில், ஜெயலட்சுமியுடன் ஜோசப் இருந்து தனிமையில் இருந்ததை பார்த்தால் அவர்கள் தாக்கியதாகவும், தன் வறுமை மற்றும் ஆதரவின்மை காரணமாக இத்தனை நாள் அதனை சகித்துக் கொண்டு இருந்த நிலையில், இன்று இந்த கொடூரம் அரங்கேறியது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாதிரியார் ஜோசப் மற்றும் ஜெயலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirunelveli Church Father Affair with Jayalatsumi Murder attempt Truth about Affair Woman