திருநங்கைக்கு வாழ்க்கை கொடுத்தவருக்கு சோகம்.. கயவர்களால் அரங்கேறிய கொடூரம்.. சாக்குமூட்டையில் 3 உடல்கள்.!!
Tirunelveli 2 Transgender and one man murder police investigation
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நரசிங்கநல்லூர் திருநங்கை காலனி பகுதியை சார்ந்தவர் பவானி (வயது 28). திருநங்கையாக பவானியும், முனைஞ்சிப்பட்டி பகுதியை சார்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி முருகன் (வயது 30) ஆகியோரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்து இருந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விஷயத்தை அறிந்த ரிஷிகேஷ் என்ற தங்கவேல் (வயது 30), முருகன் - பவானி தம்பதிக்கு குழந்தையை தத்தெடுத்து கொடுப்பதாக கூறி ரூ.3 இலட்சம் பணம் வாங்கியுள்ளார். இதனையடுத்து கடந்த 19 ஆம் தேதியன்று தங்கவேல் சேலத்திற்கு சென்று குழந்தையை தத்தெடுத்து வருவதாக கூறிய நிலையில், பவானியின் தோழி அனுஸ்கா என்ற திருநங்கையுடன் (வயது 24) சேலத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்பின்னர் தங்கவேல் மட்டும் வீட்டிற்கு திரும்பிய நிலையில், முருகன் மற்றும் பவானி, அனுஸ்கா ஆகியோர் திரும்பவில்லை. இவர்களது அலைபேசியும் அணைத்துவைக்கப்பட்டு இருந்த நிலையில், பவானி கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் உடல் இருப்பது போல உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த திருநங்கைகள் மூவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் தங்கவேல் மற்றும் அவரது மனைவி ரேணுகா, தங்கவேலின் தங்கை ஹரினா, ஓட்டுநர் செல்லத்துரை (வயது 33), ஸ்னோவின் (வயது 29) ஆகிய 5 பேரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில், முருகன் மற்றும் பவானி தம்பதியினர் நரசிங்கநல்லூர் பகுதியில் இருக்கும் திருநங்கை காலனியில் வசித்து வந்தாலும், பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதியிலும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். முருகன் வர்ணம் பூசும் தொழிலாளியாக வசித்து வந்த நிலையில், தம்பதிகள் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து, தங்கவேலிடம் ரூ.3 இலட்சம் வழங்கியுள்ளனர்.
ஆனால், குழந்தையை கொடுக்காமலும், பணத்தை வழங்காமலும் தங்கவேல் இருந்து வந்த நிலையில், தம்பதிகள் இருவரும் பணத்தை கேட்டுள்ளனர். இதனையடுத்து பணம் தருவதாக கூறி போட்டுத்தள்ள திட்டமிட்டு, இருவரையும் அனுஷ்காவுடன் காரில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் நள்ளிரவு நேரத்தில் கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி போட்டது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirunelveli 2 Transgender and one man murder police investigation