#IPL2022 : ரிஷப் பந்த்தின் சாதனையை முறியடித்த.. மும்பை இந்தியன்ஸ் இளம்வீரர்..! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் சரியாக விளையாடாமல் தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியடைந்து ப்ளே ஆஃப்-க்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

இருப்பினும் மும்பை அணியின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதற்காக திறமையாக விளையாடி வரும் வீரர்களில் திலக் வர்மாவும் ஒருவர். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் 19 வயதில் அதிக ரன்கள் அடித்தார் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரிஷப் பந்த் 19 வயதில் 366 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். இந்தநிலையில் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வர்மா 34 ரன்கள் எடுத்ததன் மூலம் 368 ரன்கள் எடுத்து ரிஷப் பந்த்தின் சாதனையை முறியடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tilak Varma broke rishabh Pant record


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->