போலீசாருக்கே தண்ணி காட்டி சென்ற டிக் டாக் வனிதா!
tik tok vinitha missing
டிக் டாக் மோகத்தில் சிக்கிய தேவகோட்டை கடம்பக்குடிபெண் வினிதா மாயமானார்.
வினிதாவிடம் தேவகோட்டை காவல் நிலைய போலீசார் தொடர்ந்து இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், திருவாரூரை சேர்ந்த டிக் டாக் தோழி அபிக்கு தனது கரூர் தோழி சரண்யா மூலம் கணவரிடம் இருந்து எடுத்து செல்லப்பட்ட 20 சவரன் நகையை கொடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து, தேவகோட்டைகாவல்துறையினர் அபி மற்றும் கரூர் பெண் சரண்யா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு தேவகோட்டை வருமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் வரவில்லை இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரிக்க தனிப்படை போலீசார் திருவாரூர் மற்றும் கரூருக்கு விரைந்தனர்.
இந்நிலையில், வினிதா தனது தாய் மற்றும் கணவருடன் செல்ல விருப்பவில்லை என மறுத்ததால் அவரை காரைக்குடியில் உள்ள மகளிர் இல்லத்தில் போலீசார் தங்க வைத்தனர். இதையடுத்து, வினிதா அங்கிருந்து மாயமானதாக தனியார் தங்கும் விடுதி சார்பில் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வினிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.