பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம் - எப்போது தெரியுமா?
ticket booking start from today in govt bus for pongal festival
தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் பொதுமக்களின் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரிவோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர்.
அதனால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருப்பதால் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் தமிழக போக்கு வாரத்துக் கழகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர் அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். இதனை டிக்கெட் முன்பதிவு மையங்களிலோ, ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ticket booking start from today in govt bus for pongal festival