நேருக்கு நேர் மோதிய சுற்றுலா வேன் - 3 பேர் பலி - 16 பேர் படுகாயம்.!
three peoples died for accident in ramanathapuram
மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள், வேன் ஒன்றின் மூலம் தனுஷ்கோடிக்குச் சென்றனர். இந்த வேனை ராமேசுவரம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்த நாகநாதன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
இதே போல் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து வடமாநில சுற்றுலா பயணிகளுடன் வேன் ஒன்று ராமேசுவரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு வேன்களும் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் அருகே உள்ள சாலையில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு வேன் சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் படி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு வேன்களிலும் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த வடமாநிலத்தினரை மீட்டு, ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இதில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மனுபாய், நாதன் பாய் உள்ளிட்ட இரண்டு பெண்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டனர். இதேபோல், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அதே மாநிலத்தை சேர்ந்த முதியவர் கிர்தாரி என்பவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை மூன்று ஆக உயர்ந்தது. மேலும், படுகாயமடைந்த வேன் ஓட்டுனர்கள் மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் என்று மொத்தம் 16 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
English Summary
three peoples died for accident in ramanathapuram