தமிழ்நாடு | பிரபல நகைக்கடையில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரி போர்வையில் இரு பெண்கள் செய்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் பகுதியில் உள்ள பாளை சாலையில் ஒரு பிரபல ஜவுளிக்கடையுடன் இணைந்த நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று இந்த நகைக்கடைக்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். 

பின்னர் சுமார் 10 பவுன் நகைகளை தேர்வு செய்துள்ளனர். அந்த பெண்கள் கடையின் மேலாளரிடம் நாங்கள் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு கேட்கும் நகையை தர வேண்டும் என கூறி உள்ளனர். 

இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பெண்களிடமும் விசாரணை நடத்தினர். இதில் ராஜலட்சுமி மற்றும் பரமேஸ்வரி என்ற இருவரும்  லஞ்சஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கு முன்னதாக ராஜலட்சுமி ராமநாதபுரத்தில் போலியாக மருத்துவமனை நடத்தி தவறான சிகிச்சை அளித்ததில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thothukudi Famous jewelry store Robbery Two women disguised as anti bribery officers in a f


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->