குடும்ப நண்பர் போல பழகிய நண்பனுக்கு மனைவியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 3 பேர் மீது ஆசிட் வீச்சு.!
Thoothukudi Wife and Friend Murder attempt due to Affair Doubt 27 June 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அசோக் நகர் 8 ஆவது தெரு பகுதியை சார்ந்தவர் பெருமாள். இவரது மகன் ரவி (வயது 50). ரவியின் மனைவி மாலா (வயது 49). இவர்கள் இருவருக்கும் மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ரவி சிப்காட் பகுதியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் தொழிலை செய்து வந்த நிலையில், கடந்த 15 வருடமாக ரவியின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல தூத்துக்குடி பி.அன்.டி களனி பகுதியை சார்ந்த சூளை மச்சாது (வயது 48) என்பவர் இருந்து வந்துள்ளார்.
சூசை பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்த நிலையில், ரவியின் மூத்த பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான செலவுகளை சூசை செய்த நிலையில், நேற்று அசோக் நகரில் உள்ள வீட்டில் சூசை - மாலா ஆகியோர் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதன்போது அங்கு வந்த ரவி, தனது மனைவிக்கும் - நண்பனுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக எண்ணி, இருவரின் முகத்திலும் ஆசிட்டை வீசி இருக்கிறார்.
இந்த சம்பவத்தின் போது, தந்தையை அழைத்து செல்ல வந்த சூசையின் மகன் கெர்பின் மீதும் ஆசிட் பட்டுள்ளது. மூவரும் பலத்த காயத்துடன் அலறித்துடிக்கவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். இதனைக்கண்ட ரவி அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், காயமடைந்தவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர்கள் குறித்த தகவல் தூத்துக்குடி சிப்காட் காவல் துறையினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thoothukudi Wife and Friend Murder attempt due to Affair Doubt 27 June 2021