காதல் திருமணம் செய்து மனைவியை, துடிதுடிக்க கொலை செய்த கொடூரன்.!
Thoothukudi love married wife murder police investigation
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வள்ளிவிளை பகுதியை சார்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில், ஆழ்வார் திருநகரி பகுதியை சார்ந்தவர் ரம்யா (வயது 21).
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு சிவபார்வதி என்ற 4 வயதுடைய குழந்தையும், கணேஷ் என்ற 3 வயது குழந்தையும் உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சவரணன் 5 மாதங்களுக்கு முன்னதாக மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இவர்கள் அங்குள்ள ஆத்தூர் தெற்கு நாடார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கூலிவேலைக்கு சென்று வந்த சரவணன் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றும் கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த சரவணன், ரம்யா அணிந்திருந்த சேலை துணியாலேயே கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும், வீட்டில் இருக்கும் தண்ணீர் நிரம்பிய வாளியில் மனைவியின் தலையை முக்கி கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi love married wife murder police investigation