திருவாரூர்: அதிமுக வார்டு கவுன்சிலர் வெட்டிபடுகொலை.. தலை தனியே, உடல் தனியே வீசிச்சென்ற பயங்கரம்.!
Thiruvarur Muthupettai Kovilur ADMK Ward Counselor Rajesh Murdered Police Investigation
முத்துப்பேட்டை அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி அடைந்து, பின்னர் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் ஒன்றிய கவுன்சிலராக இருந்த நிலையில், இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் தனது வீட்டிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். இதன் போது அங்குள்ள ஆலங்காடு பகுதியில் மதுபான கடை அருகே மறைந்திருந்த கும்பல், ஆயுதங்களுடன் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.
இதன் பின்னர், அவரது தலையை துண்டித்து தலை வேறு, உடல் வேறு என்று இருவேறு பகுதிகளில் அதனை போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தகவல் அறிந்த உறவினர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvarur Muthupettai Kovilur ADMK Ward Counselor Rajesh Murdered Police Investigation