திமுக சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர் கிழிப்பு...!
Thiruvarur DMK banner Damaged Police Investigation 7 Jan 2021
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமக்கோட்டை ஊராட்சி சார்பில் திமுகவின் மக்கள் கிராம சபை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோட்டூர் ஒன்றிய தெற்கு செயலாளர் வி.எஸ்.ஆர் தேவதாஸ், ஏ.கே.எஸ் விஜயன், டி.ஆர்.பி ராஜா மற்றும் மாவட்ட துணை செயலாளர் கலைவாணி மோகன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மக்கள் கிராம சபை கூட்டத்திற்காக திமுக சார்பில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த திமுகவினர் அப்பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.
இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகவே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் திமுகவினரிடம் விசாரணை மேற்கொண்டு, பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இது குறித்து திமுக சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvarur DMK banner Damaged Police Investigation 7 Jan 2021