#சற்றுமுன் || திருவண்ணாமலை அருகே கோர விபத்து.! பலியான உயிர்கள்., சிகிச்சையில் 20 பேர்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அருகே நடந்த வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை - செங்கம் அருகே டூரிஸ்ட் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

காவேரிப்பட்டணத்தில் இருந்து மேல்மலையனூர் கோவிலுக்கு சென்ற டூரிஸ்ட் வாகனம் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சற்றுமுன் நடந்த இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvannamalai to chengam bike van accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->