திருவண்ணாமலை : ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்.!
Thiruvannaamalai Aani month pournami kirivalam timings
திருவண்ணாமலை ஆனி மாத கிரிவலம் நாளை இரவு தொடங்குகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நாளை இரவு 7:42 மணிக்கு தொடங்கி ஜூலை 3ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5:36 மணிக்கு நிறைவடைகின்றது.
இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். மேலும், பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்களுக்கு அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Thiruvannaamalai Aani month pournami kirivalam timings