மணமான இளம்பெண்ணிற்கு இருவர் போட்டி.! இருவரும் துடிதுடிக்க அரங்கேற்றிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பத்தூர் அருகில் உள்ள கவுண்டப்பனூர் செவத்தாதான் வட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 40). அவரது மனைவி ஜெயந்தி. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். ரமேஷ் துபாயில் கம்பி கட்டும் பணி புரிகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.

திருப்பத்தூர் கவுண்டப்பனூர் தலைவர் வட்டத்தை சேர்ந்தவர் பூக்கார கிருஷ்ணன் வயது 42. இவரும் அதே பெண் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வந்திருக்கிறார். இது குறித்து இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று இரவு ரமேஷ் இளம்பெண் வீட்டில் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் பூக்கார கிருஷ்ணனும் அங்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பூக்கார கிருஷ்ணன் கத்தியால் ரமேசை சரமாரியாக வெட்டினார். அவரது கை, கால், கழுத்தின் பின்பகுதி ஆகியவற்றில் பலத்த வெட்டு காயம்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த கந்திலி போலீசார், ரமேஷ் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து பூக்கார கிருஷ்ணனை கைது செய்துள்ளார்கள். சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளரான சம்மந்தப்பட்ட அந்த இளம்பெண் அவரது கணவருடன் தலைமறைவாகியுள்ளார்.

இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமோ அல்லது கொலைக்கான காரணம் என்னவென்று, என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirupathur illegal relationship murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->