வளர்த்த நாயை திட்டியதால் ஆத்திரம்.. பகையால் அரங்கேறிய படுகொலை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ஆறுமுகநேரி காணியாளர் பகுதியை சார்ந்தவர் பால் லிங்கம். இவர் நாயொன்றை வளர்த்து வந்த நிலையில், இதே பகுதியை சார்ந்த லிங்கராஜ் என்பவர் அந்த நாயினை கடுமையான வார்த்தைகளால் திட்டி கல்லால் அடித்ததாக தெரியவருகிறது. 

இதனால் லிங்கராஜுக்கும் - பால் லிங்கத்திற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் நடந்து 3 வருடம் ஆகியுள்ள நிலையில், பழைய பகை மறக்காமலேயே இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், இன்று வழக்கம்போல மீண்டும் தகராறு ஏற்படவே, லிங்கராஜ் பால் லிங்கத்தை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் பால் லிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர், கொலை செய்த லிங்கராஜை கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchendur Aarumuganeri Murder police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->