கேள்விகேட்டதற்கு தன்னைத்தானே காயப்படுத்தி வித்தை காண்பித்த தம்பி... கேரை ஏற்படுத்திய சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்ட அல்லிநகரம் பகுதியானது கரோனா பாதிப்பு பகுதிக்குள் உள்ளதால், இது கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு சாலைகள் மூடப்பட்ட நிலையில், அங்குள்ள பிள்ளையார்கோவில் பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பு சோதனை சாவடி அமைத்துள்ளனர்.

இந்த நிலையில், பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியை சார்ந்தவர் தினகரன் (வயது 26). இவர் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு வருகை தந்த நிலையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதில் தினகரன் முன்னுக்கு பின்னர் முரணாக பதில் தெரிவிக்கவே, காவல் துறையினர் தினகரனின் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளான இளைஞர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தன்னை தானாகவே காயப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து தினகரன் மற்றும் அவரது தந்தையின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni youngster arrest by police


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->