உறவினருடன் ஏற்பட்ட விபரீத பழக்கம்.. கள்ளக்காதல் ஜோடிகளின் அதிர்ச்சி முடிவு.. கண்ணீரில் கிராம மக்கள்.!! - Seithipunal
Seithipunal


முறையற்ற உறவால் இணைந்த கள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள ராயப்பன்பட்டி சின்னமோகனாபுரம் பகுதியை சார்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி முத்துலட்சுமி. சசிகுமார் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சசிகுமாரின் உறவினர் அஜித்குமார். அஜித்குமாருக்கும், முத்துலெட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மலர்ந்ததை அடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இந்த விஷயமானது சசிகுமாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சசிகுமார் இருவரையும் கண்டித்த நிலையில், இருவரும் கேட்கவில்லை. பின்னர் இவர்களின் செயல்பாடுகளால், கள்ளக்காதல் விவகாரம் ஊருக்கே தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். முத்துலட்சுமியின் இல்லத்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் அருந்தி மயங்கி இருந்துள்ளனர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று பார்த்துள்ளனர். 

இருவரும் மயக்க நிலையில் இருக்கின்றனர் என எண்ணி அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லவே, இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், முன்னதாகவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கள்ளக்காதல் ஜோடியின் தற்கொலை முடிவு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni illegal affair couple suicide police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->