குடும்பத்திற்காக ஓடாய் உழைத்த கணவனுக்கு அம்மிக்கல்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்த மனைவி வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


முறையற்ற உறவை கண்டித்த கணவனை, அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த நிலையில், அவரது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 47). இவர் உசிலம்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில், பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். 

இவரது மனைவி மணிமேகலை. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், மணிமேகலை அதே பகுதியில் வசித்து வரும் மலைச்சாமி என்பவருடன் கடந்த நான்கு வருடங்களாக கள்ளக்காதல் உறவு வைத்திருந்தார். 

மனைவியின் கள்ளக்காதல் உறவை அறிந்த ராஜேஷ் கண்ணன், இதனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிமேகலை மற்றும் மலைச்சாமி, தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ராஜேஷ் கண்ணனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். 

சம்பவத்தன்று, அங்குள்ள தோப்பு பகுதியில் தனிமையில் உறங்கிக்கொண்டு இருந்த ராஜேஷ் குறித்த தகவல் மணிமேகலைக்கு தெரியவரவே, கள்ளக்காதலன் மலைசாமியை துணைக்கு அழைத்து சென்று ராஜேஷ் கண்ணனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், ராஜேஷ் கண்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சனையால் ராஜேஷ் கண்ணன் கொலை செய்யப்பட்டது உறுதியானதால் மணிமேகலை மற்றும் மலைசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni Govt Bus Conductor Murder by Wife due to Affair Another man 10 Feb 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->