பணத்தை கொடு.. இல்லனா விடியோவை நெட்டுல விட்டுடுவேன்.. கள்ளகாதலனின் மிரட்டலால் விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியை அடுத்திருக்கும் கடலைக்குண்டு பகுதியை சார்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி பிரேமா (வயது 27). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

முத்துராஜ் துபாயில் பணியாற்றி வரும் நிலையில், இதே பகுதியை சார்ந்த ரவிச்சந்திரன் என்பவருடன் பிரேமாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், ரவிச்சந்திரன் பிரேமாவிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கி செலவு செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பிரேமா பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், பணம் தராவிட்டால் நெருக்கமாக இருந்த விடியோவை இணையத்தில் பதிவு செய்திடுவேன் என்று மிரட்டியுள்ளான். 

இதனால் பெரும் பயத்திற்கு உள்ளான பிரேமா, தனது இல்லத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டிய கள்ளக்காதலன் ரவிச்சந்திரனை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni girl suicide attempt due to illegal affair man warn about enjoy video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->