திருப்பூர்! வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கூட்டுறவு நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இருவரும் நேற்று காலை வீட்டைப் பூட்டிவிட்டு பாட்டி வீட்டில் இருக்கும் தங்களது குழந்தைகளை பார்ப்பதாக ஊருக்கு சென்றுள்ளனர். 

இவர்கள் இருவரும் ஊரிலிருந்து இன்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

மேலும் இந்த சம்பவம் குறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிப்பதற்கு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theif break open home jewelry robbery


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->