#தென்காசி || டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து கொள்ளை.!!
Theft in tasmac Shop in tenkasi
தமிழக மட்டுமின்றி உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தென்காசியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கதவை உடைத்து மதுபானங்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து சுமார் 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தடையவியல் நிபுணர்களைக் கொண்டு டாஸ்மாக் கடையில் சோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.
English Summary
Theft in tasmac Shop in tenkasi