சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது.!
The youth who made the girl pregnant was arrested in ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி சலீம் (21). இவரது மனைவி கடந்த வருடம் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றபோது சலீமுக்கு தினமும் உறவினர்கள் சாப்பாடு கொடுத்துள்ளனர்.
இதில் சலீமுக்கு சாப்பாடு கொடுக்க வந்த போது சம்பவத்தன்று ஒன்பதாம் வகுப்பு மாணவியை மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை அடிக்கடி மிரட்டி சலீம் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்படவே சிறுமியின் தாயார் இது குறித்து கேட்டுள்ளனர். இதையடுத்து சிறுமி நடந்ததை எல்லாம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், டாக்டரிடம் சிறுமியை அழைத்துச் சென்றார்.
அப்பொழுது பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சலீமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
English Summary
The youth who made the girl pregnant was arrested in ranipet