செங்கல்பட்டு | கள்ளக்காதலிக்கு ஒரு கள்ளக்காதல்! ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூர சம்பவம்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே தனது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த ஆத்திரத்தில் வாலிபர் அந்த  கள்ளக்காதலியை தீ வைத்து எரித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் ஊராட்சி, பகத்சிங் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் செல்வம் ( 32) என்பவருக்கு திருமணமாகி பிரியா (28) என்கிற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். திருமணமான பிரியாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த குள்ளா என்கிற பிரதாபுக்கும் (35) இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இது பற்றி பிரதாபின் மனைவிக்கு தெரிய வந்ததையடுத்து அவர் தன்னுடைய அண்ணனை வைத்து பிரதாபை கண்டித்துள்ளார். இதனால் ஒரு மாதமாக பிரதாப் தனது கள்ளக்காதலி பிரியாவிடம் பேசாமல் இருந்துள்ளார்.

இந்த சமயத்தில்  பிரியாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரியாவிடம் பிரதாப் சண்டை போட்டுள்ளார். மேலும் இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பிரதாப் அவரை கொலை செய்ய திட்டமிட்டு பிரியா வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து அவர் மேல் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பிரியாவின் கணவர் அருண் செல்வம் மற்றும் அக்கம் பக்கத்தினர் பிரியாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கள்ளக்காதலன் பிரதாப்பை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The youth poured kerosene and burned the counterfeiter because of her relationship with another person


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->