திண்டுக்கல்லில் பயங்கரம்.! அரிவாளால் வெட்டி தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி‌ கொலை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளியை அறிவாளால் வெட்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சீவல்சரகு பகுதியை சேர்ந்தவர் கூடித்தொழிலாளி கருப்பையா(37). இவர் தற்பொழுது எருமநாயக்கன்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு வேலைக்கு சென்ற கருப்பையா, நேற்று முன்தினம் மனைவி மற்றும் மகள்களை பார்ப்பதற்கு எருமநாயக்கன்பட்டிக்கு வந்தார்.

இதையடுத்து நேற்று இரவு நண்பர்களுடன் கருப்பையா சந்தனவர்த்தினி ஆற்றுக்குச் செல்லும் வழியில் உட்கார்ந்து மது அருந்தியபோது நண்பர்களுக்கும், கருப்பையாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆதிரமடைந்த நண்பர்கள் கருப்பையாவை அறிவாளால் வெட்டிவிட்டு, அவரது தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் கருப்பையா இறந்து கிடப்பதை பார்த்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருப்பையாவை கொடூரமாக கொலை செய்த நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The worker was brutally murder in Dindigul


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->