கோவில் பூசாரி எரித்துக்கொலை.! திருப்பூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் கோவில் பூசாரி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெங்கமேட்டில் உள்ள கன்னிமாரா கருப்பராயன் கோவிலில், பூசாரியாக சுப்பிரமணியன் (75) என்பவர் அங்கேயே தங்கி இருந்து பூஜைகள் செய்து வந்தார். மேலும் கோவில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வந்த சுப்பிரமணி எனக்கு அவரது மகள் இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது சுப்பிரமணி தங்கி இருந்த அறையில் ரத்தம் சிதறி கிடந்துள்ளது. ஆனால் சுப்பிரமணி அறையில் இல்லாததால் கோவில் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்பொழுது சுப்பிரமணி தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகள் சத்தம் போடவே, அப்பகுதியில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதில் சுப்ரமணியின் உடல் துணியால் சுற்றப்பட்டு எரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுப்பிரமணியை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The temple priest was burnt to death in Tiruppur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->