" வெயில் மண்டையை பொளக்கப்போகுது " ! வெப்பநிலை 3 டிகிரிவரை அதிகரிக்கும்..வானிலை ரிப்போர்ட்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஜூன் 13ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பை விட அதிகபட்சமாக 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் , ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்தது. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்  தமிழகத்தில் உள்ள சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்தது.

இந்தநிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கன்னியாகுமாரி, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முற்பகல் வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்று முதல் வரும் ஜூன் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். சென்னையில் சில பகுதிகளின் வெப்பநிலை இயல்பை விட அதிகபட்சமாக 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The temperature will rise up to 3 degrees


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->