மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்.. பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்.!
The teacher who sexually harassed the student Relatives besieged the school.!
கோவை அருகே உள்ள பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்வதாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுகுணாபுரம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடல் பயிற்சி ஆசிரியராக பிரபாகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவியர் படித்து வருகிறன்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக ஆசிரியர் பிரபாகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இதனையடுத்து பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
English Summary
The teacher who sexually harassed the student Relatives besieged the school.!