மறுமலர்ச்சி திமுக இப்போ மகன் திமுகவாக மாறிவிட்டது.! துரை வைகோ கொடுத்ததே புறங்கையை தான்- வெளுத்து வாங்கும் மல்லை சத்யா! - Seithipunal
Seithipunal


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) உள் மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சி நிறுவனர் வைகோவுக்கும், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், தற்போது உண்ணாவிரத போராட்டமாக மாறியுள்ளது.

திமுகவில் 'வாரிசு அரசியல்'விமர்சித்து மதிமுகவைக் கிளறிய வைகோ, தற்போது தனது மகன் துரை வைகோவுக்கு கட்சியில் தலைமை பொறுப்புகள் வழங்கியதைக் கண்டித்து, கட்சிக்குள் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் வைகோவின் விரோதியாகக் களத்தில் இறங்கியுள்ளார் மல்லை சத்யா.

சென்னையில் தீவுத்திடல் அருகே உள்ள சிவானந்த சாலையில், மல்லை சத்யா தலைமையில் உண்மைப் பொருளை மக்களிடம் விளக்குவதற்கும், உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கவும், உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் வைகோவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தின் போது மல்லை சத்யா கூறியதாவது:“வைகோ எனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறுகிறார். ஆனால், நிச்சயமாக அவரிடம் இருந்து நான் எந்த துரோகமும் செய்யவில்லை. கட்சியின் ஜனநாயக அடிப்படைகள் அழிக்கப்படுவதை கண்டித்துத் தான் இந்த அறப்போராட்டத்தை நடத்துகிறேன்.”

அதோடு,“28 ஆண்டுகள் ஜனநாயக போராளியாக இருந்த வைகோ, தற்போது திமுகவுக்கு இணையான வாரிசு அரசியலுக்கு சென்று விட்டார். மதிமுக இன்று ‘துரை வைகோ’ என்ற ஒரே நபருக்கான இயக்கமாக மாறிவிட்டது,” என்றும் கடுமையாக சாடினார்.

மேலும்,“என் பெயரில் யாரோ மன்னிப்பு கேட்டதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால், நான் விலகவில்லை, அவரும் என்னை நீக்கவில்லை. எனவே, நான் இன்னும் மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறேன். எனது நிலைப்பாடு தெளிவானது,” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சமீபத்தில் வைகோ மற்றும் துரை வைகோ முன்னிலையில் நடைபெற்ற இணைப்பு நிகழ்வைப் பற்றி,“துரை வைகோ கையை கொடுத்தது கூட புறங்கையாக தான். மனங்களும், கைகளும் இணையவில்லை. பண்பாட்டில்லாத ஒருவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்,” எனவேண்டுமானாலும் கூறினார்.

இந்த முற்றிலும் மாறுபட்ட விமர்சனங்கள் மற்றும் களத்தில் நேரடியாக இறங்கிய போராட்டம், மதிமுகவின் உள்ளமைப்பு சீர்குலையக்கூடிய அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வைகோ தரப்பிலிருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை. ஆனால், மல்லை சத்யா தலைமையிலான இந்த போராட்டம், விரைவில் மதிமுகவில் புதிய அரசியல் மாற்றங்களைத் தூண்டக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The revivalist DMK has now become the son DMK Durai Vaiko gave the wrong hand Mallai Sathya who is buying it with a vengeance


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->