தடுப்பூசி செலுத்தலையா... வெளில வராதீங்க.. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு..!
The Puducherry government has announced that public places will not be allowed if the vaccine is not paid
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் வெளியில் நடமாட தடை விதிப்பதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தோற்று கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிகைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையில் ,தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 100 சதவீதம் சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக புதுசேரியை மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
புதுசேரியில் 77 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில் மீதமுள்ளவர்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு பல முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் புதுசேரி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தெரிவிக்கப்படுள்ளதாவது புதுசேரியில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இதனை மீறுவர்கள் உடனடியாக தண்டிக்கபடுவார்கள் என தெரிவிகக்ப்படுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுஇடங்களுக்கு வர தடை விதிக்கப்படுள்ளது.
English Summary
The Puducherry government has announced that public places will not be allowed if the vaccine is not paid