திண்டுக்கல்: போட்டோகிராபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய முதியவர்
The old man who cut the photographer in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டோகிராபரை முதியவர் அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்(48). இவர் போட்டோ கிராபராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உல்லிகோட்டை பகுதியை சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் பெண்ணின் கணவர் சிறையில் இருந்தார். அவரை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக தாமரைக்கண்ணன் உதவி செய்துள்ளார். மேலும் பெண்ணின் நகைகளை வாங்கி தருவதாக கூறி இது துெதாடர்பாக பெண்ணின் தந்தை சுப்புலட்சுமணமுத்தரசன்(70) என்பவருடன் தாமரைக்கண்ணனிடம் பேசி வந்துள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று இவர்களுக்கிடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுப்புலட்சுமண முத்தரசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாமரைக்கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தாமரைக்கண்ணன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The old man who cut the photographer in Dindigul