தஞ்சாவூர் அருகே சோகம்.! 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஆலடிக்குமுளை புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஜான்ராஜ். இவருடைய மனைவி மாலதி(22). இவர்களுக்கு ஹர்சன் (2) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் மாலதி பல்வேறு சுய உதவி குழுவிற்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது.

இதனால் மாலதி பலரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால் பணம் கிடைக்காததால் மனவேதனையில் மாலதி, குழந்தை ஹர்சனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The mother committed suicide by poisoning the child in Thanjavur


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->