தர்மபுரி.! கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்து - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

மத்திய பிரதேசத்திலிருந்து இரும்புக் காயில் ஏற்றி வந்த லாரி சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. 

அப்பொழுது தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் கணவாய் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது.

இதில் முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி, பின்பு அப்பகுதியில் இருந்த தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல்துறையினர் மற்றும் சுங்க சாவடி ஊழியர்கள், லாரியை அப்புறப்படுத்தும் பணி ஈடுபட்டனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The lorry lost control and crashed into the barricade in dharmapuri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->