தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை!
The infant tossed in the rotten fruit with the banana peel
பச்சிளம் குழந்தையை சாலையோர முட்புதரில் வீசிச்சென்ற தாய் யார்? எதற்காக அவர் குழந்தையை வீசிச்சென்றார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சமீப காலமாக குழந்தை கடத்தல், குழந்தைகளை பெற்றெடுத்து வீசி சென்று விடுவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சட்டவிரோதமாக முறையற்ற வாழ்க்கைய சிலர் குழந்தைகளைப் பெற்று அந்த குழந்தைகளை குப்பை தொட்டிகளில் வீசி செல்வது போன்ற சம்பவங்களும் அரங்கேறிய சம்பவங்களும் நிகழ்ந்ததுண்டு, இந்த நிலையில் திருத்தணியில் அரசு மருத்துவமனை அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில் இயங்கிவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம் அருகில் உள்ள முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் அப்பகுதியில் வசிக்கும் இளங்கோ என்பவர் முட்புதர் அருகே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் துணியில் சுற்றி வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அந்த குழந்தையை இளங்கோ, மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அதனை தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
பச்சிளம் குழந்தையை சாலையோர முட்புதரில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? எதற்காக அவர் குழந்தையை வீசிச்சென்றார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The infant tossed in the rotten fruit with the banana peel