மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் தோப்புக்கான சடாய் தெரு பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் சேட்டு. இவருடைய மனைவி பானுமதி (32). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவியுடைய தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சேட்டு மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு எதுவும் தெரியாததுபோல் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

இதையடுத்து டியூஷன் முடிஞ்சு இரவு 7 மணியளவில் இரண்டு மகன்களும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது வீட்டில் படுத்திருந்த பானுமதியை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து ஆற்காடு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கணவரிடம் விசாரணை நடத்தியதில் பானுமதி உடல்நிலை சரியில்லாததால் இறந்ததாக கூறி, எதுவும் தெரியாததுபோல் நடித்துள்ளார்.

இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார், சேட்டுவிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில், குடும்ப பிரச்சனையில் ஆத்திரமடைந்து மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சேட்டுவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband who murder his wife in ranipet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->