குப்பை மேட்டில் கிடந்த பெண்குழந்தை.. பிறந்து சில மணி நேரத்தில் வீசி சென்ற அவலம்..! - Seithipunal
Seithipunal


பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை குப்பையில் கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வேலூர் காகிதப்பட்டறை அருகே பகுதியில் குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பை கிடங்கில் காலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டது.  அந்த பகுதி மக்கள் பார்த்த போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று கிடந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The girl lying on the rubbish heap


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->