மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவு.. உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி நேற்றுடன் (ஜூன் 14) 61 நாட்கள் அமலில் இருந்தது. 

இந்த மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்கள் வலைகளை பராமரிப்பது, படகுகளை பழுது பார்ப்பது உள்ளிட்ட வேலைகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.

இந்த மீன்பிடி தடை காலங்களில் மீன்களின் வரத்து குறைந்து காணப்படுவதால் மீன்களின் விலை அதிகரித்தது. இந்த நிலையில் நேற்றுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கடலோர மாவட்டங்களில் இருந்து 10,000 மேற்பட்ட விசைப்படைகளில் மீன் பிடிக்க கடலுக்கு உற்சாகமாக செல்கின்றனர்.

அந்த வகையில் கடலோர மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதால் படகுகளில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்து கடலுக்கு செல்கின்றனர்.

தற்போது மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தொடங்கி விட்டால் மீன்களின் வரத்து அதிகரிக்கும் அதன் காரணமாக மீன்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The fishing ban ends today fishermen went to the sea


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->