மதுபோதையில் தகராறு செய்த மகன்.! ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற தந்தை.! கோவில்பட்டி அருகே பரபரப்பு - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் மது போதையில் தகராறு செய்த மகனை சரமாரியாக தந்தை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டு ராமன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துராஜ்(55). இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் முத்துக்குமார்(27). இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு வந்த முத்துக்குமார், குடிபோதையில் தந்தையிடம் தகராறு செய்து, அறிவாளால் வெட்ட முயன்றுள்ளார். 

அதனால் ஆத்திரமடைந்த தந்தை மகனிடமிருந்த அருவாளை பிடுங்கி, சரமாரியாக முத்துக்குமாரை வெட்டியுள்ளார். இதனால் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் தந்தை முத்துராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கோவில்பட்டி போலீசார், உயிரிழந்த முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மகனை வெட்டி கொன்ற தந்தை முத்துராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The father who killed his son in Thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->