16 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை...! அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம்...! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான கட்டிட தொழிலாளி. மனைவியை இழந்த இவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான தொழிலாளி கடந்த 2022ஆம் ஆண்டு தனது 16 வயது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து சிறுமி இந்த சம்பவம் குறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து தொழிலாளி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The court sentenced the father who raped his 16 year old daughter to life imprisonment in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->