மது பழக்கத்தால் பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்..! சேலத்தில் நடந்த சோகம்..!
The couple committed suicide in Salem
மது பழக்கத்தால் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வைகுந்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு ஒன்றை ஆண்டுகளுக்கு முன் பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. லாரி உரிமையாளரான கார்த்திக்குக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது.
மது பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கூறியுள்ளார். ஆனால், கார்த்தி மது பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று கார்த்திக் மது அருந்தி வந்துள்ளார். இதை பிரியா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் கார்த்திக்குகு தகவல் அளித்தனர். இதனை அறிந்த அதிர்ச்சியடைந்த கார்த்திக் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபழக்க்த்தால் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The couple committed suicide in Salem