விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூலிதொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்.!
The body parts of the labourers who was brain dead in the accident were donated
கும்மிடிப்பூண்டிக்கு அடுத்து உள்ள பெருவாயல் கிராமத்தைச் சேர்ந்த சேகர் வயது (59). இவர் மனைவி சிவகாமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த 9-ந்தேதி அன்று இரவு உணவு வாங்குவதற்காக சென்ற சேகர் பெருவாயல் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதால் தலையில் பலத்த காயம் அடைந்த சேகர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையறிந்த உறவினர்கள் அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், சேகரின் கல்லீரல், சிறுநீரகம், உள்ளிட்ட உறுப்புகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பிற நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது.
English Summary
The body parts of the labourers who was brain dead in the accident were donated