தமிழகத்தை சேர்ந்த கவிஞர் தாராபாரதி மறைந்த தினம்.!!
thara bharathi memorial day
தாராபாரதி :
தமிழகத்தை சேர்ந்த கவிஞர் தாராபாரதி 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் 'குவளை" என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன்.

34 ஆண்டுகள் ஆசிரியர் பணி சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள், கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் ஆகியவை இவரது படைப்புகளாகும்.
தமிழ்நாடு அரசு 2010-2011ஆம் ஆண்டில் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. கவிஞாயிறு என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இவர் 2000ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள் :
1857ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் சர் ரொனால்டு ராஸ் பிறந்தார்.
2001ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி இந்திய நாவலாசிரியர் ஆர்.கே.நாராயணன் மறைந்தார்.
English Summary
thara bharathi memorial day