கோவில்பட்டி.! கருவாடு குடோனில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


கோவில்பட்டி அருகே உள்ள கருவாடு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த அந்தோணி அரசாங்க மணி என்பவர் சிவந்திப்பட்டி- சீத்தாம்பட்டி சாலையில் கருவாடு ஆலை மற்றும் குடோன் வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை கருவாடு குடோனில் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. தீயானது குடோன் முழுவதும் பற்றி எரிந்து கரும்புகை வெளியேறி வருவதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த கருவாடு மூட்டைகள் மினி லாரி, ஆலையில் இருந்த எந்திரங்கள் சேதம் அடைந்து உள்ளன.

மேலும் இந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrible fire accident at Karuvadu Gudon


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->