ஈரோடு.! பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மலர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அபிமன்யு என்ற மகனும், கலைவாணி(15) என்ற மகளும் உள்ளனர். கலைவாணி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று கலைவாணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அருகில் உள்ள பெரியம்மா கலைவாணியை கூப்பிட்டு பார்த்து வீட்டின் கதவு திறந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் கலைவாணி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கலைவாணியை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர் கலைவாணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tenth grade student commits suicide by hanging in erode


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->