வட்டிப்பணம் வாங்க சென்ற மூதாட்டி, பேத்தி கொடூர கொலை.. நாட்டிற்காக பணியாற்றிய இராணுவ வீரரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


வட்டிக்கு பணம் கொடுத்து வந்த ராணுவ அதிகாரியின் மாமியார் மற்றும் மகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்புலியூர் உச்சிமாகாளி என்பவரின் மனைவி கோமதி அம்மாள் (வயது 55). இவர்களுடைய மகள் சீதாலட்சுமி. அங்குள்ள கடபோகத்தி பகுதியைச் சார்ந்த முருகனுக்கும், சீதாலெட்சுமிக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த தம்பதிகளுக்கு உத்ரா என்ற ஒன்றரை வயது மகள் உள்ள நிலையில், இராணுவ வீரராக பணியாற்றி வந்த முருகன் காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிவருகிறார். தன் பேத்தி மீது மிகுந்த பாசம் வைத்துள்ள கோமதி அம்மாள், பேத்தியை தன் வீட்டிலேயே வைத்து வளர்த்து வந்துள்ளார். குழந்தை உத்ராவின் தாய் கணவரின் இல்லத்தில் வசித்து வருகிறார். 

கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி கோமதி அம்மாள், பேத்தி உத்ரா ஆகியோர் காணாமல் போயுள்ளதாக தென்காசி காவல் நிலையத்தில் உச்சிமாகாளி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தனது மாமியார் மற்றும் மகள் காணாமல் போய்விட்டதால், காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முருகனும் அவர்களை தேடி வந்துள்ளார். விசாரணையில், இறுதியாக கோமதி அம்மாள் தனது பேத்தியுடன் வேட்டைக்காரன்குளம் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரின் வீட்டிற்கு சென்றது தெரியவந்துள்ளது. 

வட்டிக்கு பணம் கொடுத்து வந்த கோமதியம்மாள், சம்பவத்தன்று வீட்டிற்கு வந்து பணம் வாங்கிவிட்டு உடனே சென்றுவிட்டதாக பாண்டியம்மாள் தெரிவிக்கவே, விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், கோமதி அம்மாள் உள்ளூரில் பலரிடமும் வட்டிக்கு பணம் கொடுத்திருப்பது தெரியவந்த நிலையில், பாண்டியம்மாளும் கடன் வாங்கியுள்ளார். ஆனால், வட்டிக்கேட்டு அவ்வப்போது கோமதியம்மாள் பாண்டியம்மாளின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். 

பாண்டியம்மாள் சம்பவத்தன்று ஆத்திரத்தில், வட்டி வசூல் செய்ய வந்த மற்றொருவரிடம் அடிக்கடி வட்டிக்கு பணம் கேட்டு வந்தால் கோமதியம்மாளை போல கொலை செய்து புதைத்துவிடுவேன் என்று மிரட்டவே, இந்த விஷயம் அரசல் புரசலாக உள்ளூர் முழுவதும் பரவி காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. 

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் பாண்டியம்மாளை கைது செய்து விசாரணை செய்கையில், வீட்டிற்கு வந்த கோமதியம்மாள், அவரின் பேத்தி உத்ரா கொலை செய்யப்பட்டது உறுதியானது. மேலும், பாண்டியம்மாள் மகன் சுரேஷின் திருமணத்திற்கு ரூ.25 பணம் கடனுக்கு வாங்கியிருந்த நிலையில், வட்டிக்கேட்டு வீட்டிற்கு வந்த கோமதியம்மாள் மற்றும் அவருடன் வந்த பேத்தி உத்ராவை கொலை செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பான வழக்கில் பாண்டியம்மாள், அவரின் மகன் சுரேஷ், மகள்கள் மகேஸ்வரி மற்றும் இசக்கியம்மாள், உறவினர் பூதத்தான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குடும்பமே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. முத்துமாலைபுரம் சாலையில் புதைக்கப்பட்டு இருந்த கோமதியம்மாள் மற்றும் உத்ராவின் உடலை மீட்ட காவல் துறையினர், பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Keelapuliyur Woman Gomathiyammal and his Grand Child Uthra Murdered Police Solve Mystery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->